Monday 14 April 2014

நெஞ்சம் மறப்பதில்லை

அவளை நெருங்க நெருங்க,
என்னை நானே விலகிப் போகிறேன்

அவளை நினைக்க நினைக்க,
எனனை நானே மறந்து போகிறேன்

அவள் என்னை திரும்பி பார்க்க,
அன்றாடம் அவள் பின்னே செல்கிறேன்.

அவள் என்னை விரும்பி பார்க்க,
நல்லவன் போல நாடகம் போடுகிறேன்

அவள் என்னுடன் பேசி விட்டால்,
எனக்குள் நானே பேசிக் கொள்கிறேன்

அவள் என்னுடன் பேசா விட்டால்,
தாயுடன் பேசவும் மறந்து போகிறேன்

அவள் என்னை வெறுக்க வெறுக்க,
அவளை மட்டுமே அதிகமாக நேசிக்கிறேன்

அவள் என்னை மறந்து போக,,
இன்னமும் அவளையே நினைத்து வாழ்கிறேன்.


அவளை மறப்பதை விட உயிர் துறப்பதே மேல்!!!

No comments:

Post a Comment